கொழும்பில் தமிழர்கள் வாழ் பகுதியில் அருவருப்பான செயல் ; கடும் விசனம்!

   கொழும்பு - வௌ்ளவத்தை காலிவீதி சம்பத் வங்கிக்கு முன்னால் உள்ள வீதி கடவை பொத்தானில் சாப்பிட்ட பபிள்கத்தை ஒட்டி வைத்த சம்பவம் தொடர்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது,

வீதியை கடப்பதற்காக பொத்தானை அழுத்த கையை வைக்கின்ற இடத்தில் யாரோ ஒருவர் இந்த அநாகரீகமாக சப்பிய பபிள்கத்தை, ஒட்டிவைத்துள்ளதாக சமூகவலைத்தள வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.


Clean Srilanka வேலைத்திட்டம்  எப்படி சாத்தியமாகும்?

பலரும் பயன்படுத்தும் வீதி கடவை பொத்தானில் பபிள்கத்தை, சப்பி துப்ப இடமில்லாமல் வீதி கடவை பொத்தானில் ஒட்டியுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது வீதி சமிக்ஞைகளை மக்கள் மதிப்பது மிகவும் குறைவு என்றும், அதன் காரணமாகவே விபத்துக்கல் அதிகளவில் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை சிங்கப்பூரில் இவ்வாறு சப்பிய பபிள்கத்தை ஒட்டி வைத்திருந்தால் 2000 சீங்கப்பூர் டொலர் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form